உழவர்பால் நன்றி சொல்லும்
உணர்வுகள் பொங்கட்டும்
தாய் வைத்த தமிழ் பொங்கல்
தளதளவென பொங்கட்டும்
வாய் வைத்த செங்கரும்பில்
வளர்சுவைதான் பொங்கட்டும்
மைவிழியார் மாதரிடை
மஞ்சள் நலம் பொங்கட்டும்
வீடெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்
விறுவிறுவென பொங்கட்டும்
கலக்கம் இல்லா சிந்தனைகள்
கதிரொளி போல் பொங்கட்டும்
அடுத்தவரின் நலம்பாடும்
இதயமெல்லாம் பொங்கட்டும்
என் அருமை தமிழ் மொழியின்
இனிமையெல்லாம் பொங்கட்டும்
அனைத்துயிரும் பகர்ந்துண்னும்
பொதுவுடைமை பொங்கட்டும்
என் உயிர் போல் எல்லா உயிரும்
இன்புறவே பொங்கட்டும்
பொன் மனமே நீ மட்டும்
பகையுணர்வில் பொங்காதே!!!!...
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
__________________
என்றும் விக்டர்.....
-----------------
|