புதியவர்கள் பதிப்பு பற்றி ஓர் ஆலோசனை
அன்பு நண்பர்களே..
இது ஓர் ஆலோசனைதான்.. புகார் அல்ல..
நம் லோகத்தில் வருடாவருடம் புதியவர்கள் சேர்க்கை உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.. ஆனால் இந்த வருடம் வழக்கமான காலத்தில் புதியவர் சேர்க்கை என்று இல்லாமல் தைத்திங்கள் முதல்நாளை ஆரம்பமாகக்கொண்டு நம் தலைவர் அறிவித்தார்.
நாம் எல்லாரும் இதை ஆவலுடன் வரவேற்றோம். வரும் புதியவர்களை மகிழ்வோடு இருகரம் நீட்டி நம்லோகத்தில் இன்முகம் காட்டி சேர்த்துக் கொண்டோம்.
ஆனால்.. இந்த வருடம் வந்த புதியவர்கள் பதித்த பதிப்புகள்.. அவை கதை என்றாலும் சரி.. மற்ற பங்களிப்புகள் என்றாலும் சரி.. பெரும்பாலும்.. (அனைத்தும் அல்ல) அவையெல்லாம் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டு திரி பூட்டப்படுகின்றனவே...
என்ன காரணம்..?
நான் நம் தளத்தில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன்..
ஏன் இப்படிப் பதிக்கிறார்கள்..?
நம் தளத்தின் விதிமுறைகளை செவ்வனே படித்துத்தானே நிர்வாகத்தினரால் செலக்ட் ஆகி தள நுழைவு அனுமதி பெற்று நம் தளத்தினுள் நுழைகிறார்கள்..?
பின் ஏன் இப்படி சொந்தப் படைப்புகள் அல்லாமல் காப்பியடித்துப் பதிக்கிறார்கள்..?
புதியவர்களை இப்படி பதிக்கத் தூண்டுவது எது..?
நம் லோகத்திற்குப் புதிதாய் வந்திருக்கும் புதியவர்களே..
உங்களின் கருத்துக்களைக் கூறுங்களேன்..
(பழையவர்களும் கருத்து கூறலாம்..)
|