அஷோவின் 5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
அடித்துச் சொல்லலாம் இந்த ஐய்யாயிரத்தில் ஒரு வரி பின்னூட்டமே இருக்காதென.
என் அனுபவம் அஷோவுடன்:
முதலில் தனிமடல் வழியே காரமாய் ஒரு குட்டு.. மூக்கு மேல் ரோசம் வந்துவிட்டது எனக்கு. ரெம்ப விலகி இருந்தேன். ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஒரு சந்தேகத்துக்காக நண்பர்கள் அனைவருக்கும் மடல் அனுப்ப, அனைவரும் பதிலுக்கு காட்டிய திசை-அஷோ.
சிரிய சந்தேகத்தில் அவரின் கனிவான விரிவான பதில் மடலைக் கண்டு குளிர்ந்தது மனம். இதோ இப்போது வரை தொந்தரவு (மன்னிக்கவும்.. தொந்தரவு என்று சொன்னால் அவருக்கு பிடிக்காது..இருந்தாலும்) தந்து கொண்டு இருக்கிறேன்.
தவறு செய்தால் குட்டி, நல்ல முயற்சிக்கு பாராட்டி இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
லோகத்தில் என் சாதனையாக நான் நினைப்பது.. புதையல் கதம்பக்கதைக்கு அஷோவிடமிருந்து வாங்கிய 500 இ-பணம்
5000 பதிப்புக்கு வாழ்த்துக்கள் அஷோ.
நன்றி