Quote:
Originally Posted by subbu2000
..என் ஒரு கதைக்கு நண்பர் ஒருவர் விடாமல் விமர்சித்து (கிரிடிசைஸ்) செய்தார்.....நான் அதனை நேர் மறை நோக்கில் எடுத்துகொண்டு இனி கதை எழுதும் போது இது போன்ற நண்பர்களும் லோகத்தில் இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வுடன் கவனமாக எழுதுகிறேன்.....அந்த நண்பருக்கு என் நன்றிகளை காணிக்கை யாக்குகிறேன் ...
|
இது தேவையில்லாத கருத்து நண்பரே..
நண்பரே.. உங்கள் கதையில் "விமர்சன"த்தைப் பதிந்தவன் நான் ஒருவன் மட்டுமே.. அப்படியிருக்கையில் நீங்கள் வெளிப்படையாக என் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கலாமே.. அதற்கு ஏன் தயக்கம்..? (எவரின் பெயரையும் குறிப்பிடவேண்டாம் என கேட்டுக்கொண்டிருப்பதாலோ) பரவாயில்லை.. உங்களின் கருத்துக்குப் பதில்கருத்து இதோ..
விமர்சனம் என்றால் அதை கிரிட்டிசைஸ் என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் நண்பரே..?
ஒருவேளை மாதவிடாய் பற்றிய வர்ணனைகளையும் இயற்கை உபாதைகள் பற்றிய விவரிப்புகளையும் பின்னூட்டம் என்ற பெயரில் ஆஹா ஒஹோ எனப் புகழ்ந்தும் அருமையான கற்பனை என்று போற்றியும் கைதட்டி கரகோஷம் செய்து ஆரவாரப்படுத்தியும் இருக்கவேண்டுமோ..?
என்னால் அப்படி துதிபாடியாகவும் அடிவருடியாகவும் இருக்கமுடியாது நண்பரே..
உங்கள் கதையைப் படிக்கும்பொழுது என் மனதில் தோன்றியவற்றையே நான் நாகரீகமாகப் பதித்தேன். மற்றபடி நீங்கள் என் கதையில் பதிப்பதுபோல்.. "நாய்க்கூட்டம்" என்றெல்லாம் நான் பதிக்கவில்லை. இதிலிருந்தே விமர்சனம் என்பதற்கும் கிரிட்டிசைஸ் என்பதற்கும் உங்களுக்கு அர்த்தம் விளங்கியிருக்கும் நண்பரே..