கல்பனாவின் துணிவு பாராட்டதக்கது. பதில் தனி செய்தி மூலம் எச்சரித்தும், இம்மாதிரி செயலில் ஈடுபட்டவர் வருந்தாவிடில், தள நிர்வாகத்திடம் புகார் அளிப்பது நியாயமே.
"நம் தளத்தில் உறுப்பினராக இருப்பதனால், வேசிகள் என்று அர்த்தம் அல்ல" எனக் கூறியதில் ஆக்ரோஷமும், உண்மையும் பளிச்சிடுகிறது.
அவர் சுட்டிக் காட்டிய உறுப்பினர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தள நிர்வாகம் தெரிவித்தால், பிறருக்கு எச்சரிக்கையாக இருக்கும். எவரெவர் என்பது நமக்குத் தேவையில்லை. அது கல்பனாவுக்கும், தள நிர்வாகத்துக்கும், குற்றம் புரிந்தோருக்கும் மட்டும் தெரிந்திருப்பதுதான் நாகரிகம்.
|