அன்புள்ள மெளனி,
என் கதைகளுக்கு நீங்கள் எழுதிய விமர்சனங்கள் என்னை வெகுவாய் ஊக்குவித்தது நிஜம். நாம் இருவரும் இணைந்து கதை எழுத வேண்டும் என லோகத்தில் சில வாசகர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். நாமும் ஒரு புதிய அறிவியல் கலந்த காமக் கதை எழுதுவதாய் திட்டம் இட்டு இருந்தோம். நேரம் காலம் தக்க சூழல் கைகூடி வராமல் போய்விட்டது. நான் என் பணியில் பிசி. நீங்கள் கனடாவில் உங்கள் வேலையில் பிசியாக இருந்தீர்கள்.
காலம் எவ்வளவோ மாற்றியது. புரட்டியடித்தது.
சில நாட்களுக்கு முன்னர் நீங்கள் சர்க்கரை நோயால் துன்புறுகின்றீர்கள் என்ற பதிவினைப் படித்தேன். இப்பொழுதெல்லாம் சர்க்கரை நோயை வெகு எளிதாக வென்றுவிட அதிகமான மருத்துவ அறிவியலும் உணவு முறைகளும் வந்திருப்பதால் மருத்துவர்களின் துணையுடன் எளிதாக கையாள்வீர்கள் என நினைத்திருந்தேன்.
ஆனால் இன்று கேன்சர் என்று சொல்கின்றீர்கள்.
திரைப்பட நடிகை கெளதமி கூட ஒரு முறை கேன்சரிலிருந்து மீண்டு வந்ததாக எங்கோ படித்த நினைவு.
எனவே நவீன மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுங்கள்.
நாங்கள் அனைவரும் உங்களுடன் உறுதுணையாக தோள் கொடுத்து நிற்போம். கண்டிப்பாக மீண்டு வருவீர்கள் !
டிஸ்கி: நீங்கள் ஒரு முறை என்னை, “ஸ்ரீராமுக்கு நல்ல பெண் மனைவியாய் அமைவாள்” என வாழ்த்தினீர்கள். இன்னமும் திருமணம் ஆகாத அதே அக்மார்க் கன்னிப் பையனாய் வலம் வருகின்றேன்.
|