Quote:
Originally Posted by asho
சென்ற வருடத்தில் இதே நேரத்தில் தளத்திலே அப்போதைக்கு ஆன் லைனில் இருப்பவர் எண்ணிக்கை சராசரியாக 4
|
Quote:
Originally Posted by asho
சராசரியாக பதிக்கப்பட்ட திரிகள் 2.5
|
Quote:
Originally Posted by asho
பதிக்கப்படும் பதிப்புகள் எண்ணிக்கை 7 என இருந்தது
|
Quote:
Originally Posted by asho
இப்போது தளத்திலே தினமும் 15 பேராவது ஆக்டீவாக உள்ளனர் தினமும் 150 பேருக்கு மேல் தளம் வருகிறார்கள், சராசரியாக தினமும் 25 பதிப்புகள் 4 திரிகள் உருவாகின்றது. மகிழ்ச்சியாக உள்ளது. இதில் எந்த சமரசமும் யாருக்கும் செய்ததில்லை என்பதால் தான்.
|
சரியான நேரத்தில் தேவையான, முறையான நடவடிக்கை. அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
லோக விதிமுறைகளை மதிப்பதோடு, நேரம் கிடைக்கும் போது தங்களால் இயன்ற பங்களிப்புகள் பின்னூட்டங்கள் கொடுத்தும், மாதாந்திர போட்டியில் அனைவரும் வாக்களித்தும் வந்தால் 'களையெடுப்பு' கண்டு யாரும் அச்சமுற தேவையே இல்லை.
தகுதி இறக்கம் அடைந்து விட்டவர்கள் மீண்டும் முயற்சி செய்தால் அடுத்தடுத்த வாசலை அடைவது ஒன்றும் கடுமையான காரியம் இல்லை.
குறள்:
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். (616)
முயற்சி என்பது மகிழ்வைத் தரும், முயற்சியின்மை என்பது துன்பத்தைத் தரும். முயல், ஆமை கதை நாம் அறிந்த கதை. முயல், ஆமையிடம் ஏன் தோற்றது என்றால், முயலாமையால் தோற்றது என்பது விடையாகும். முயலாமை என்பது தோல்வியையே தரும்.
கதாசிரியர்களை ஊக்க படுத்துவோம். ஒவ்வொரு போட்டிகளிலும் மறக்காமல் வாக்களிக்க முயற்சிப்போம். அனைவரும் ஒன்று பட்டு பங்களிப்புகளை தொடர்ந்து கொடுக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த வாசலுக்கு முன்னேறுவதோடு,
களையெடுப்பு-க்கு இனி வேலை இல்லை என்ற நிலையையும் உருவாக்கிட முடியும்.
நம் ஒவ்வொருவரின் பங்களிப்பே லோகத்தின் வளர்ச்சி ஆகும். இதை மட்டும் நினைவில் கொள்வோம்.
பாராட்டியதோடு 'களையெடுப்பு' எந்த காரணத்துக்காக செயல் படுத்தப்பட்டது என்பதை அனைவரும் தெளிவுற விளக்கிய மேற்பார்வையாளர் அசோ அவர்களுக்கு என் நன்றிகள்!