ஒரு நீண்ட இலக்கணத்தை கொடுத்து விட்டார் நண்பர் சூப்பர் மேன்...
என்னுடைய பார்வையில்
1 ஒரு நல்ல கதைக் கரு கிடைத்திருக்க வேண்டும்
2 அதனை எப்படி எழுத போகிறோம் என்ற திட்டம். அதாவது ஆரம்பம் நிகழ்வு முடிவு
இதில் தெளிவிருந்தால்...பாக்கியெல்லாம் தானே அமைந்து விடும்...
முக்கியமானது கதைகள் எழுது முன் நிறைய படித்திருக்க வேண்டும்...படிப்பென்றால் பின்னூட்டமிடும் அளவுக்கு ஆழ்ந்த படிப்பு. நம்மையறியாமல் யாருடைய ஸ்டைலாவது பிடித்து போயிருக்கும்...அந்த ஸ்டைலை கொஞ்சம் மாற்றி நாமும் எழுத வேண்டியது தான்
கதைக்கரு எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம்...கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருக்க வேண்டும் அவ்வளவே...
__________________
அன்புடன் சுப்பு 2000
|