அஷோ அவர்களே, நீங்கள் நினைப்பது போல், வெறும் ஹேக்கிங் செய்து இருந்தால் நீங்கள் சொன்ன யோசனைகளை நான் மேற்கொண்டு இருப்பேன். நான் அவனால் பிளாக்மெயில் இன்றும் செய்யப்பட்டு வருகிறேன், ஏனனில், என்னுடைய குடும்பத்தின், சில போட்டோஸ் அவனுக்கு நண்பன் என்று நம்பி அனுப்பி ஏமாற்றப்பட்டேன். நான் இந்த விவரமெல்லாம் மற்றவர்களுக்கு சொல்லாமல் என் இ மெயில் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.
இந்த தனி ஒருவனால் நான் கடும் மன உளைச்சல் மற்றும் பயத்துடனே தற்போது வாழ்ந்து வருகிறேன்.
இவனால், நான் என்னுடைய அத்தனை ஐடிக்கள் அதாவது, facebook twitter linked in யாஹூ மெஸ்சேன்ஜ்ர் என்று எனக்கு இருந்த அத்தனை ஐடிக்களும் நிரந்தரமாக மூடி விட்டேன்.
எனக்கு என்னுடைய பழைய ஐடி வேண்டாம் என்று முடிவு பண்ணி தான் இந்த கேள்வியை கேட்டேன்.
உங்கள் விரிவான பதில்களினால் என்னுடைய இ மெயில் ஐடி மாற்றி விட்டேன். உங்களுக்கும், தலைமை நிர்வாகி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
|