எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் விடாமல் பின்னுட்டமிட்டு என்னை தொடர்ந்து எழுததூண்டும் என் இனிய நண்பர்களுக்கு இந்த பரிசினை காணிக்கையாக்குகிறேன்.....இதெல்லாம் உங்களால் தான் சாத்தியமானது நண்பர்களே.....
வாக்களிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.....அதற்கும் எனது நன்றிகள்....வாக்களிக்க வூக்கமூட்டிய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.....
ஆனால் இந்த பரிசுகளை விட தரமான, விலாவாரியான பின்னுட்டங்கள் அதிகரித்தால் கதை எழுதும் அனைவருமே மிக மகிழ்வார்கள்.....உங்களின் எழுத்துக்கள் எங்களை பண்படுத்தும்....எங்கள் வழிகள் செம்மைபடுத்த படும். உங்களுக்கும் நல்ல கதைகள் கிடைக்கும்.
ஆகவே பின்னுட்டங்களின் எண்ணிக்கையை அதிக படுத்துங்கள்....இங்கே மிக அருமையான பின்னுட்டமிடும் நண்பர்கள் அநேகர் உண்டு ஆனால் ஏனோ அவர்களெல்லாம் இப்போது பின்னுட்டமிடுவதே கிடையாது....ஒருவேளை அவர்களின் எதிர்பார்ப்பு அளவுக்கு நம் எழுத்து இன்னும் உயரலியோ என்று சில நேரம் தோன்றுகிறது......விடமாட்டேன் நண்பர்களே.....உங்களிடம் பின்னுட்டம் பெறாமல் விடமாட்டேன்.....எழுதிக்கொண்டே இருப்பேன்.
மிக அருமையாக விடாமல் தொடர் கதைகளாக எழுதி குவிக்கும் நண்பர்களை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது.....நாமும் அதுபோல சாதிக்கவேண்டும் என்ற ஆசை பெருகுகிறது.....கற்பனை வற்றாத அந்த நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.....
என்னுடன் பரிசினை பகிர்ந்துகொள்ளும் சிங்கை தமிழன், தமிழ்கிளி, ஷீலா, ஜேஜே, சினேக் மற்றும் கார்த்தி ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.....
__________________
அன்புடன் சுப்பு 2000
|