View Single Post
  #45  
Old 03-06-21, 05:37 PM
Nambikainayagan Nambikainayagan is offline
User inactive for long time
 
Join Date: 23 May 2021
Location: Tamilnadu
Posts: 57
My Threads  
ஜாம்பவான் எழுத்தாளர் மௌனி அவர்கள் இறந்துவிட்டார் என்னும் செய்தி ஒவ்வொரு காமக்கதை வாசர்களுக்கும் பேரதிர்ச்சியை தந்திருக்கிறது.வேறு சில தளங்களிலும் அவர்களுக்காக இரங்கல் பதிவுகள் பகிரப்பட்டு வருவதை பார்க்கும் போது மௌனி அவர்கள் பெற்ற புகழ் எல்லைக்கு அளவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது.

இத்தளத்தில் மௌனி அவர்கள் எழுதிய படைப்புகளை படிக்கும் தகுதியை நான் இன்னும் அடையவில்லை என்பதை எண்ணும்போது மிகுந்த துர்பாக்கியசாலியாக உணர்கிறேன்.வேறு சில தளங்களில் மௌனி அவர்கள் எழுதிய ஒரு சில கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மௌனி அவர்கள் பெண் என்பதை அறிந்த போது காமலோகத்தின் தேவதை அவரே என அடிப்படை உறுப்பினராகிய என்னால் உணர முடிந்தது.

பெண்ணாக இருப்பினும் தைரியமாகவும் தனது புரட்சிகரமான சிந்தனைகளாலும் பல கதைகளை படைத்த சிங்கப் பெண்ணிற்கு என் வீர வணக்கங்கள்.

போலி கலாச்சாரம் மற்றும் சமுதாய கட்டுப்பாடுகள் போன்ற தடைகளால் மௌனி போன்ற மாபெரும் ஜாம்பவான் எழுத்தாளரை கடைசிவரை உலகம் கொண்டாட தவறி விட்டது என்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மை.

மௌனி அவர்களின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்திய அகாடமி விருது அல்லவா கொடுத்து கவுரவப்படுத்திருக்க வேண்டும் இந்த நயவஞ்சக உலகம்.

மௌனி அவர்கள் மறைந்தாலும் அவர்கள் பெற்ற புகழ் என்றும் மறையாது.காமக்கதைகள் படிக்கும் கடைசி வாசகன் இருக்கும் வரை அவர் மக்கள் மனதில் என்றும் நிறைந்து இருப்பார்.

மௌனி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அன்னாரின் மறைவை எண்ணி வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote