View Single Post
  #1  
Old 11-04-14, 02:53 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
பின்னூட்ட நாயகன் டியர் 'திரு ராஜ்' மூவாயிரம் கடந்துவிட்டார் வாருங்கள் வாழ்த்துவோம் !!

வாழ்த்துகள் டியர் திரு ராஜ்

இந்த லோகம் எத்தனை தான் பல கதை ஜாம்பவான்களை பெற்றிருந்தாலும், வாசகர்கள் இல்லையெனில் அவை யாவும் களத்துமேடு காணா அறுத்துப்போட்ட சம்பா நாத்து பயிர் மாதிரி தான். அறுவடையினால் எந்த பயணும் இருக்கப்போவதில்லை. அதுமாதிரி கடைக்கு வந்த சரக்கை வாங்க ஆள் இல்லைனா அதுக்கு ஏது மதிப்பு ?

அதே மாதிரி தான் நம் லோகத்தில் நாம் எத்தனைக் கதைகளை எழுதித்தள்ளினாலும் இந்த வாசகர்கள் இல்லையேல் கதைகளும் இல்லை என சொல்லலாம். நாம் எழுதும் கதைகளை படிப்பதற்க்கென்றே இங்கே ஓர் வாசகர் கூட்டம் எந்நேரமும் பசியெடுத்த பங்காளைனைப்போல் அதனை ருசிக்க காத்துக்கொண்டிருப்பதால் தான் நமக்கும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்துதல் ஏற்படுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளன் போற்றி புகழ்ந்துக்கொள்வதென்பது கண்கட்டு வித்தை மாதிரி. நீ என்னை புகழ்ந்துக்க, நான் உன்னை புகழ்ந்துக்கிறேன் என்ற பாணியில் தான் இருக்கும். ஆனால், நமது எழுத்தின் தரத்தை மிக சரியாக கணிப்பவர்கள் நண்பர் திருராஜ் போன்ற வாசகர்கள் மட்டும் தான்.

ஏங்க போட்டின்னு வந்துட்டா நம்ம நம்ம கதைக்கு தானே நாம ஓட்டுப்போட்டுக்கொள்கிறோம் ? ஆனால் இவர்கள் அப்படியில்லையே ! என்னங்க நான் சொல்லுறது ? அப்போ நமது கதையினை மதிப்பீடு செய்து அதன் சரியான அளவு கோல்களாக திகழ்வது நண்பரைப்போன்ற வாசகர்கள் தான் என்பதில் எவ்வளவு உண்மைகள் அடங்கியுள்ளது. அட நம்ம மச்சான் தான் இந்த உண்மையை அவரது வாசகர் சவாலிலேயே போட்டு உடைத்துவிட்டாரே மக்களே !

'டியர்' என ஆரம்பிக்கும் பின்னூட்டமில்லாத கதைகளே இல்லை என சொல்லுமளவிற்கு நண்பர் டியர் திரு ராஜ் Thiru Raj அவர்களின் பின்னூட்டம் இந்த லோகத்தில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. அதே சமயம் நான்கைந்து வரியில் மிக தெளிவாகவும் இவர் சொல்ல வந்தக் கருத்தினை மிக அழகாக சொல்லிவிடுவார்.

2005ல் சேர்ந்த நண்பர் திரு ராஜ் இதுவரை இரண்டே இரண்டு திரி தான் ஆரம்பித்துள்ளார்.

ஒன்று. அவரது முதல் அறிமுகத்திரி.
இரண்டு. திருராஜ் காம சிரிப்புகள்

நண்பர் திரு ராஜ் நல்ல நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதை அவரது இந்த காமச்சிரிப்பு திரியை பார்த்து தான் தெரிந்துக்கொண்டேன் !

சில நாட்களுக்கு முன்பே நான் நண்பர் 3000த்தை கடந்துவிட்டதை அறிந்திருந்தாலும், அப்பொழுதே அவரது விசிட்டர் மெஸ்சேஜில் நான் அவரை வாழ்த்தியிருந்தாலும், ஏனோ அப்பொழுது அவருக்கு திரி துவங்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்ப்படவில்லை. காரணம் எனக்கு அவரது அறிமுகத்திரியை கண்டபொழுது ஒரு வித கோபம் என்றுக்கூட சொல்லலாம்.

ஆனால் இன்று காம சந்தேகப் பகுதியில், 'எதிர்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு ஒன்று இருக்குமா...?' என்ற ஓர் திரியில் நான் அவரது பின்னூட்டம் ஒன்றக் கண்ட பொழுது அதில் இவ்வாறு எழுதியிருந்தார்...
Quote:
Originally Posted by Thiru Raj View Post
குடும்பம் என்பது காலத்தின் கட்டாயம்.
மனித குலம் அழியும் வரை அது ஒரு சில மாறுபாடுகளோடு இருந்து கொண்டேதான் இருக்கும்.
அது தானாகவும் அழியாது. யாராலும் அழிக்கவும் முடியாது.
- ராஜ் -
அப்பொழுது தான் புரிந்தது, ச்சே, நாம இவரையா தப்பாக நினைத்துக்கொண்டோம் ? என்று. அப்போ ஏதோ ஒரு ஆர்வத்திலே அதுமாதிரி அவர் அறிமுகம் கொடுத்திருக்கலாம், அப்படிபட்டவராக இருந்தால், மற்ற நண்பர்களின் அருமையான காமக்கதைகளை எல்லாம் படிப்பாரா ? பின்னூட்டமிடுவாரா ? என்ற கேள்வி என்னுள் எழுந்தது, ஆக அவரது இந்த வாழ்த்துத் திரியும் பிறந்தது !

ஆகவே, நம் லோகத்தின் பழைய உறுப்பினரான திரு ராஜ் அவர்கள் மேலும் மேலும் பல மைல்கற்களைக் கடந்து நம் எல்லோர் மனதிலும் என்றென்றும் குடிசைபோட்டு வாழ்ந்துக்கொண்டிருக்க வேண்டும், மேலும் மேலும் பல சாதனைகள் புரியவேண்டும், முடிந்தால் எதிர்காலத்தில் அவரது கதையையும் நாம் படிக்கும் பாக்யம் கிடைக்கவேண்டும் என சொல்லி பூலோகத்திலும் அவருக்கு நன்மைகள் பல உண்டாக நாம் எல்லோரும் அவரை வாழ்த்தலாம் வாருங்கள் தோழர்களே !!

Last edited by Mathan; 12-04-14 at 12:35 AM.
Reply With Quote