சொல்லப் போனால்... இந்தத் திரி தொடங்குவதற்கு எனது மனதில் அடித்தளத்தில் ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது... அதை நானே உணரவில்லை போலும்..
நண்பர் ஆதி வந்தவுடன் தான் அது மெல்ல மெல்ல மேலே வந்தது. காரணம்... "பூட்டு".
சில மாதங்கள்.. அல்லது வருடங்களாகக் கூட இருக்கலாம்.. ஒரு நிர்வாக உறுப்பினர் துவங்கிய ஒரு திரியை . வேறு ஒரு நிர்வாக அங்கத்தினர் 'பூட்டு" போட்டு விட்டார். இருவருமே அந்த நேர்த்தில் நிர்வாக உறுப்பினர்.. மங்கலாக ஞாபகம் இருப்பது.. ஏதோ ஒரு மொழி கற்பது பற்றிய திரி.. அங்கு சர்ச்சை என்ற கேள்விக்கே இடம் இல்லை.. பூட்டு செயல்படும் அளவுக்கு அமைதி கெடவும் ஒரு அம்சமும் இல்லை..
அதானாலேயே இந்த "ஏணிப்படி" பற்றிய சந்தேகம் எழுப்பினேன்..
அசோ கேட்டபடி எனது எச்சரிக்கைப் புள்ளி .. இங்கு ஒரு பொருட்டே அல்ல..! அதற்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.. அது எங்கே?? என்று விதிமுறைகள் தெள்ளத் தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும்.. ('அந்த'த் திரி பூட்டப் பட்டு பல வருடங்கள் ஆகி விட்டது என்பது வேறு விஷயம்.. !)
எனவே எனது ஆலோசனை நம்பர் (1)... எல்லா விதி முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு திரியில் பதித்தால் என்ன???
தற்போது பல இடங்களிலும் சிதறிக் கிடக்கின்றன...
|