View Single Post
  #30  
Old 28-09-05, 07:39 AM
Guna2009 Guna2009 is offline
User inactive for long time
 
Join Date: 27 Jul 2002
Posts: 1
My Threads  
இது ஒரு அருமையான தலைப்பு. பாராட்டுக்கள் சிவா அவர்களே.

ஆனால் பதினைந்து கதைகளைப் படைத்தால்தான் மற்ற பகுதிகளுக்கு அனுமதி என்று கூறினால் அந்த பதினைந்து கதைகளை எழுதிமுடிக்கவே அவர்களுக்கு நேரம் கிடைக்காது.

இந்த தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் வேறு வேலையில் இருப்பவர்கள். அவர்களால் தொடர்ந்து சில மணி நேரங்கள் கதை எழுதுவதற்கு செலவிட முடிவதில்லை. நான் எழுதிய ஒரு கதையே இன்னும் பாதியில் நிற்கிறது. ஆறு பாகங்கள் வரவேண்டிய கதை இரண்டு பாகங்களுடன் நிற்கிறது. காரணம் நேரமின்னைதான். தொடர்ந்து சில மணி நேரங்கள் ஒதுக்கமுடியவில்லை என்ற காரணம்தான்.

ஆனால் தொடர்ந்து சிறப்பாக பதிவு செய்துகொண்டிருந்தாலே நல்லது. அதுபோல் வரும் கதைகளுக்கு ஒரு சில வார்த்தைகளாவது எழுதினால் கதையை எழுதியவருக்கு மீண்டும் உற்சாகம் பிறக்கும் அடுத்த கதை எழுதுவதற்கு.

நன்றி வணக்கம்
ஆரென்
Reply With Quote