Quote:
Originally Posted by காமராஜன்
தற்போது பலர் கருத்து என்று கூறிச் செல்கிறார்கள் என்றாலும் - 'விமரிசனம்' என்ற ரீதியில் வரும் பதிப்புக்கள் மிகக் குறைவே -- சொல்லப் போனால் விரல் விட்டு எண்ணிவிடலாம். எனது கருத்தில் விமரிசனம் எழுதுவது கதை எழுதுவதை விட சிரமம். சாதாரண கருத்துக்கள் பலதும் கதைகளை வாசிக்காமல் கூட .. ஸ்கோர் கூடுவதற்காக செய்யப்படுவது ஆங்காங்கே புலப்படலாம்.
ஒரு சின்ன ஆலோசனை..
ஒவ்வொரு மாதமும் "சிறந்த விமரிசனம்" அல்லது "சிறந்த விமரிசகர்" என்று ஒருவர் ஊக்குவிக்கப் படலாம்.
இது வாக்களிப்பால் நிச்சயமாக நடக்காது. பொதுவாக எல்லா பதிப்புக்களையும் நோட்டமிடும் ஒரு அல்லது இரு நடுவர்களால் தீர்மானிக்கப்படலாம்.
விமரிசனங்களின் தரம் கூடும்போது நிச்சயமாக படைப்புக்களின் தரமும் உயரவே செய்யும்.
|
தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. நானும் நிறையப் பதிவுகளை பார்க்கிறேன்.. அவை எண்ணிக்கையை மட்டுமே கூட்டுவதற்காகப் பதியப்படுகின்றன என்பது கண்டு வேதனையாக இருக்கிறது.. இவற்றைக் கண்காணித்து அவர்களின் பாயிண்டுக்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்தால் தாங்கள் கருத்துக் கூறியபடி தரமான விமர்சனங்களும் அதன் விளைவாக தரமான படைப்புகளும் வரும் என்பது வெகு நிச்சயம்.
இந்த வகையில் நம் அங்கத்தினர்கள் சிலர் நிச்சயம் உதவுவோம்.