2 நாளில் பிரச்சனையை சரி செய்த தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதுவும் எந்த இழப்பும் இல்லாமல் சரி செய்து விட்டதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். போன முரை மன்றத்தில் பல தகவல் இழந்து அதை அனைவரும் மறு பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது. இந்த முரை அது போன்ற இழப்புகள் எதுவும் இல்லாம செய்து விட்டார் நமது தலைவர்.
தளம் பெரிதாகி விட்டதால்தான் பிரச்சனைகள் வருகிறது என்று சொல்லி இருக்கிறார் தலைவர். அதனால் லோக மக்களே இனிமேல் ஒரு வரி பயனில்லாத பதிவுகள் எதையும் செய்ய வேன்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
பழைய பயன்படாத திரிகள் பலவற்றை நீக்கி ஸ்பேஸ் ஏற்படுத்தலாம் என்பது என் யோசனை. அதற்க்கு தனி திரி ஆரம்பித்து படைப்பாளிகளை அங்கு வின்னப்பம் செய்ய சொல்லலாம்.
படைப்பாளிகள் தாங்கள் ஆரம்பித்து பிசுபிசுத்து போன பழைய திரிகள் மற்றும் பயனில்லாத திரிகளை நீக்கி விடும் படி அங்கு வின்னபித்தால் நிர்வாகிகளுக்கு குப்பைகளை கழைய இன்னும் வசதியாக இருக்கும்.
|