எதிர்பாராத நிகழ்வு... என்ன சொல்வதென்று தெரியவில்லை. மனம் வேதனைப் படுகிறது.
நாங்கள் கைகோர்த்து எழுதிய 20/20 வகை கதைகள் வாசகர்களுக்கிடையே பிரபலமானது. சில மாதங்களுக்கு முன்பு கூட என்னிடம் தனிமடலில் பேசிக்கொண்டிருந்தார். திரும்ப 20/20 எழுதலாம் வாங்க என்று அழைத்தார். தன்னுடைய ஆரோக்கியக் குறைவு பற்றி சொல்லி இருக்கிறார். நானும் ஆறுதல் சொல்லி தேற்றினேன்.
நானும் இங்கே வருவது அறிதாகிவிட்டது. எனவே அவரைப் பற்றி அடிக்கடி தெரிந்துகொள்ளமுடியாமல் போனது. ஆனாலும் அவர் மறைந்த மறுநாளே இங்கே வரச்செய்தது எது என்று புரியவில்லை.
ஆழ்ந்த அனுதாபங்கள். வேதனையுடன் போராடிக்கொண்டே கதைகளையும் படைத்த மௌனியின் ஆன்மா சாந்தியடையட்டும்.
|