RasaRasan |
11-12-15 07:34 PM |
Quote:
Originally Posted by venkat8
(Post 1368470)
தமிழகத்தில் எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். அவர்களிருவருக்கும் ஆபத்தில்லை என்று அறிந்து மகிழ்ந்தேன்.
|
யார் எக்கேடு கெட்டு போனால் என்ன? என்ற எண்ணத்தில் குளத்தில் தண்ணீர் திறப்பதற்கு நாள் நட்சத்திரம் நேரம் காலம் என பார்த்து திறந்ததால் அவர்களிருவரும் நலமே. மற்ற சென்னைவாசிகள்தான் மூழ்கி போனார்கள்.
Quote:
Originally Posted by venkat8
(Post 1368470)
பாண்டியிலும் வெள்ளம். அநபாயனிடம் யாராவது பேசினீர்களா?
|
அநபாயன் நலமாக உள்ளார். விஜியும் நலமாக உள்ளார்.
Quote:
Originally Posted by venkat8
(Post 1368470)
ராரா & மச்சான் குமரி பக்கம் எந்த பிரச்சினையும் இல்லையே?
|
நன்றி வெங்கட். இங்கே தினமும் மழை பெய்கிறது. எங்கள் ரோடுதான் மோசமாக இருக்கிறதே தவிர மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது இல்லை. எங்க ஏரியாவில் வடிகால்களும் குளம் குட்டைகளும் அதிகம். சென்னையை போல் எந்த வேசி மகன்களும் இங்கே குளம் குட்டைகளை ஆட்டையை போடவில்லை.
Quote:
Originally Posted by venkat8
(Post 1368470)
தாமிரபரணியிலும் வெள்ளம் என்று கேள்விப்பட்டேன். பச்சி நலமா?
|
பச்சி தற்போது வெளி நாட்டில் உள்ளார். தாமிரபரணியில் 40 கனாடி வெள்ளத்தை கழிந்த 2 நாட்களாக திறந்து விட்டார்கள். தாமிரபரணி கரையோர மக்களை இடம் மாற்றியுள்ளதாக செய்தியில் கேட்டேன்.
Quote:
Originally Posted by tdrajesh
(Post 1368395)
அதிர்ஷ்டவசமாக சற்று நேரத்திற்கு முன்பு போனில் புழுவாரை தொடர்பு கொள்ள முடிந்தது. தரை மாடியில் இருந்த அவர் வியாழன் கிழமை வரை முதல் மாடியில் இருந்ததாகவும், இப்போது திருப்போரூரில் இருப்பதாகவும் சொன்னார். வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் நீரில் மூழ்கி விட்டதாக சொன்னார். குடும்பத்தினர் நலம், உடல் நல குறையேதும் இல்லை என்றும் சொன்னார்.
|
உங்கள் மூலம் புழு அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி ராஜேஷ் சார்.
Quote:
Originally Posted by venkat8
(Post 1368470)
அபார்ட்மெண்ட்டின் மொட்டைமாடியில் நின்றுக்கொண்டு ஹெலிகாப்டரிலிருந்து போடும் உணவிற்கு கையும் ஏந்தியிருக்கிறேன். ம்ம் கசப்பான நிகழ்வுகள்..
|
Quote:
Originally Posted by kamakodangi68
(Post 1368740)
ஆனால் நான் வசிப்பது முதல் தளம். எனவே என்னை அடைக்கலம் நாடி வந்த மூவரை நான் கடந்த 1ம் தேதி முதல் 9ம் தேதி காலை வரை உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை கொடுத்து உதவி நல்லபடியாக அவரவர் வீடுகளுக்கு திரும்ப அனுப்பினேன்.
|
இயற்கை பேரிடர் என வந்து விட்டால் ஏழை பணக்காரன் வித்தியாசம் இன்றி மனிதனாகி விடுகிறான். சென்னையிலும் பக்கத்து வீட்டில் யார் யார் என தெரியாதவர்கள் எல்லாம் இன்று ஒருவருக்கொருவர் உதவ ஆரம்பித்துள்ளனர். ஒருவருகொருவர் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
|