தலை சிறந்த நடிகை மனோரமா நேற்று மறைந்துவிட்டார் அய்யா அம்மணி !
தலை சிறந்த நடிகை மனோரமா நேற்று மறைந்துவிட்டார் அய்யா அம்மணி !
அவருக்கு நம் அஞ்சலியை தெரிவிப்போம் அய்யா அம்மணி ! மாலை இட்ட மங்கை படத்தில் கண்ணதாசன் அவர்களால் அறிமுகப்பதப்பட்டு 1500 படங்களுக்கு மேல் நடித்தவர் ! ஆறு முதல்வர்களுடன் நடித்தவர் ! சிவாஜி எம் ஜி ஆர் முதல் ரஜனி கமல் வரை அனைவருடனும் நடித்தவர் ! பொம்பிளை சிவாஜி என்று அழைக்கப்பட்டு சிவாஜிக்கு இணையாகவும் சில சமயங்களில் அவரையும் தூக்கிச் சாப்பிட்டவர் இவர் ! சந்திரபாபு முதல் நாகேஷ் வரை அனைவருடனும் நடித்தவர் ! அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் துல்லியமானது ! அவரின் இழப்பு மிகவும் ஈடு செய்ய முடியாதுதான் ! அவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானது ! |
மனோரமா என்ற சொல்லே மனதிற்கு மிகவும் ரம்யத்தை தருபவர் என்று பொருள் படும். தனது சிறந்த நடிப்பாலும் நகைச்சுவை உணர்வுகளாலும் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்காத இடம்பெற்றுள்ள மனோரமாவின் மறைவு திரை உலகிற்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இவரது இயற் பெயர் கோபி சாந்தா. மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் காலடி வைத்தவர். மத்ய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
சரஸ்வதி சபதம் என்ற படத்தில் அவரது கள்ளமற்ற திக்கிக்கி திக்கி பேசும் மழலை தமிழ் மறக்க முடியாதது. அதேபோல் தில்லானா மோகனாம்பாள் சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களில் அவரது நடிப்பும் தமிழ் உச்சரிப்புகளும் மறக்க முடியாதவைகள். 78 வயது கோபி சாந்தா என்ற மனோரமா அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைவதாக. |
இது ஒரு மாபெரும் இழப்பு. இவருக்கு இணையாக நடிப்பு துறையில் இன்னும் யாரும் கிடையாது.
அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். |
தமிழ் திரையுலகின் ஒரு நட்சத்திரம் மின்னுவதை நிறுத்தி இளைப்பாறுகிறது ........அந்த ஓய்வு அந்த நட்சத்திரத்துக்கு சுவர்க்கமாக அமையட்டும்
|
ஆச்சியின் மறைவு கேட்டு வருத்தமடைந்தேன்.. கடந்த வாரம் சென்னையிலே நடைபெற்ற விழாவிலே அவர் பேசிய பேச்சு..அப்பப்பா..
ஆச்சியின் ஆத்மா சாந்தியடையட்டும்.. |
சென்ற வாரம் குமுதத்தில் அவர் பேட்டி வாசித்தேன்..
நிஜமாகவே தமிழ் திரியுலகுக்கு பேரிழப்பு.. அவர் ஆத்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கிறேன்.. |
ஆச்சியின் மறைவு தமிழ் திரை உலகிற்கு பேரிழப்பு... கடைசியாக அவர் ஆசைப்படி பேசிய கதை வசனங்கள் அருமை... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
|
ஆச்சி மனோரம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..
|
ஆச்சியின் ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறைவனை இறைஞ்சுகிறேன்
|
அரிதாரம் பூசி விட்டால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டும் வளமான நடிகை மனோரமா.! தமிழ் திரையுலகம் ஒரு நடிப்பு சிகரத்தை இழந்துவிட்டது.! இனி நாயகனின் அம்மாவாக நடிக்க இவரை போல் யார் கிடைப்பார்கள்???. அவரின் ஆத்மா இறைவனில் இளைப்பாறட்டும்.!
|
All times are GMT +5.5. The time now is 05:28 PM. |
Powered by Kamalogam members