4000 - பதிப்புகளை தாண்டிய தம்பி Mathan - வாழ்த்துவோம் (updated: 11.03.14)
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் நல்ல நண்பனாக அன்பு சகோதராக விளங்கும் எனது அன்பு தம்பி மதன் http://www.kamalogam.com/new/customa...ar17302_10.gif Mathan தனது கடின உழைப்பால் நல்ல கதைகளையும் பின்னூட்டங்களையும் படைத்து 2000த்தை தொட்டு சாதனையெனும் சாலையில் வந்து கொண்டிருக்கும் அவரை நண்பர்கள் நாம் அவர் வழியில் வரவேற்று உற்சாகப்படுத்தி மேலும் பல ஆயிரங்களை படைக்க பாராட்டி வாழ்த்துவோம் வாருங்கள் நண்பர்களே.
2000 கண்ட அன்பு தம்பிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இன்னும் பல ஒன்று சேர்ந்த அன்புக்களை படைத்து எங்களை மகிழ்விக்க வாழ்த்துகிரேன். Mathan -ன் படைப்பாளி அறிமுக திரி > மதனின் மறுபக்கம் அன்புடன் அண்ணன் அநபாயன். |
அநபாயன் நீங்க ஆரம்பிச்சிட்டீங்களா. இப்பத்தான் தளம் வந்து திரியை எப்படி தொடங்கலாம் என அசை போட்டு கொண்டிருக்கும் போது உங்களின் வாழ்த்து திரி வந்து விட்டது. திரி தொடங்கிய அநபாயன் அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்.
நண்பர் மதனுடன் முன்னர் அதிகம் பழகியதில்லை. வாசகர் சவால் 45ல் மதனால் படைக்க பெற்ற பூந்தாழையில் ஒரு பூங்காவியம் கதையை படித்த பின்னர்தான் மதன் அவர்கள் மேல் என் பார்வை பட்டது. சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சென்டிமெண்டோடும் சொல்லியிருந்தார். கழிந்த அக்டோபர் மாத திகில் இரவு கதையில் தொடர்ச்சியாக 5 பாகங்களை தந்திருந்தார். நல்ல க்ரைம் டிடெக்டிவ் கதையில் அவர் தனது முழு உழைப்பையும் காட்டியிருந்தார். கழிந்த மாதம் நடைபெற்ற நிர்வாக சவால் போட்டியில் பூர்ணிமாவின் புது அவதாரம் என்ற கதைக்கு தொடர்ச்சி தந்து, நவம்பர் மாத சவால் ராஜாவாகவும் முடி சூட்டி கொண்டார். சவால் ராஜாவாக வெற்றி பெற்ற மதனுக்கு என் வாழ்த்துக்கள். தற்போது பச்சி அவர்களின் வாசகர் சவால் 53ல் "ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா" என நீண்ட் நெடும் காவியத்தை கவிதை இயற்கை காதல் ஆக்ஷன் சென்டிமெண்ட் என எல்லாம கலந்த கலவையாய் தந்து கதையை வாசிப்போரின் மனதை தொட்டுள்ளார். இன்னும் பல தொடர் கதைகள் என தளத்தில் நிறைவான பங்களிப்பை செய்துள்ளார். சமீபத்தில் எல்லா கதைகளிலும் மதனின் விமர்சனங்களை காண்கிறேன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் தனது பின்னூட்டத்தில், கதைக்கான பின்னூட்டத்தை காரசாரமாக தருகின்றார். தன் மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் பின்னூட்டமாக தருகின்றார். சமீபத்தில் எனது கதைகளுக்கும் தந்த பின்னூட்டத்தில் என் கதையின் தவறினை சொல்லியிருந்தார். இன்னும் இரண்டு கதைகளுக்கு நல்ல பின்னூட்டம் தந்திருந்தார். மதனின் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தந்தது. இது போல் வெளிப்படையான பின்னூட்டங்கள் தருவதால் இன்னும் கதை எழுதும் ஆர்வமும் அதிகரிக்கிறது. 2000 பதிவுகளுடன் பேர் சொல்லும் விமர்சன வேந்தனாக வலம் வரும் அன்பு நண்பர் மதன் லோகத்தில் இன்னும் நல்ல படைப்புகளையும் பதிவுகளை தரவும், தனிப்பட்ட அவரது வாழ்வில் சிறக்கவும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். |
மனதில் பட்ட விமரிசனங்களை நச்சென்று ஸ்பாட்டிலேயே பின்னூட்டமாகப் போட்டுவிடுவது நண்பர் மதனின் தனிச்சிறப்பு,
அதேபோல், சிறந்த படைப்புகளை மனம்விட்டுப் பாராட்டி, படைப்பாளியின் மனம் குளிர வைத்துவிடுவார். எல்லாப் படைப்புகளுக்கும் தவறாமல் ஆஜராகி உண்மையான கருத்துகளை எடுத்துரைப்பார். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ என்ற தன்னுடைய சமீபத்திய கதை மூலமாக, காதலின் ஆழத்தைக் கவிதை வரிகளால் சொல்லியிருக்கிறார். அன்பு நண்பர் மதன் இன்னும் பல்லாயிரம் பெற வாழ்த்துகிறேன். தக்க சமயத்தில் திரியைத் தொடங்கிய அநபாயன் அண்ணனைப் பாராட்டுகிறேன். |
திரி தொடங்கிய சோழருக்கு பாராட்டுகள்.
திரியில் தீபமாய் ஒளி வீசும் நண்பர் மதன் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகள். |
நண்பர் திரு மதன் (எ) மன்மதன்,
நல்ல படைப்பாளி கம் உழைப்பாளி. (காமத்தை மிகைப்படுதினால் இவருக்கு பிடிக்காது. சிறுபிள்ளை தனம் என்று திட்டுவார்.ஹி ஹி) நல்ல கதை விமர்சகர். ஆராய்ந்து நிறை குறைகளை சுட்டுவதில் இவருக்கு நிகர் இவரே. 2000 தொட்ட அவரை வாழ்த்துவதில், மேலும் பல ஆயிரங்களை தொட, மனதார பாராட்டுகிறேன். திரி தொடங்கிய அண்ணன் திரு. அநபாயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். |
2,000த் தொட்டு , மேலும் பல நல்ல படைப்புக்களைத் தந்து கொண்டு முன்னேறி வரும் ஆசிரியர், அன்பர் 'மதன்' அவர்களுக்குப் பாராட்டுக்களும்,க்களும், நன்றியும் !
[COLOR="DarkOliveGreen"]அந்த 2,000 பதிவுகள் எல்லாமே சிறந்த பதிவுகள்! எதுவுமே ஒன்றுக்கு ஒன்று சோடை போனது இல்லை ! அவர் மேலும் வளர்ந்து காமலோகம் மேலும் மேன்மை பெற உழைக்க வாழ்த்துக்கள்! அவரின் எல்லை தொட்ட செய்தியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஆசிரியர், அன்பர் anabayan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியும் ! |
விரைவாக 2000 பதிப்புகள் கடந்த மதனை பாராட்டுகிறேன். தங்க வாசல் அடைந்தற்க்கும் என் வாழ்த்துக்கள்.
|
தலைப்பை கண்டவுடன் முதலி தடியை எடுத்து வந்து ஆரம்பித்தவரை அடிக்க தான் உள்ளே நுழைந்தேன். பின்ன என் அன்னன் மதனை தம்பி மதன் என்று குறிப்பிட்டு அவர் வயசை அநியாத்துக்கு குறைத்த குற்றவாளியை விட கூடாது என்ற ஆவேசத்தில் நுழைந்தேன் ஆனால் திரி ஆரம்பித்த பெரியவர் என் சித்தப்பா அனபாயன் என்று தெரிந்ததும் என் கோபத்தை அடக்கி கொன்டு பின்னூட்டம் எழுதுகிறேன்.
மதன் சிறந்த படைப்பாளி, சிறந்த பின்னூட்டவாதி இது இன்றல்ல நேற்றல்ல லாங் லாங் எகோவிலிருந்து இருக்கிறது. காமலோகத்தில் நான் மறக்க முடியாத ஒரு நபர் மதன். அவரும் நானும் பல விசயங்களில் ஒரே கருத்துகளை கொன்டவர்கள். மாற்று கருத்து விசயத்தில் நானும் அவரும் குப்பற படுத்து புரன்டு சன்டை போட்டவர்கள். ஆனாலும் எங்கள் நட்பு அதிகரித்ததே தவிர குறையவில்லை. இடையில் கொஞ்ச நாள் கேப் விட்டு வந்த மதன் இந்த சில மாதங்களாக புயல் வேகத்தில் கதை பின்னூட்டம் படைத்து கொன்டு இருக்கிறார். இவர் பின்னூட்டங்கள் சாதர்னமானது அல்ல பிரிச்சு மேஞ்சுருவாரு. இவர் பின்னூட்டங்கள் சைஸ் பாத்தா இவர் டபுள் மடங்கு பதிப்பாளர் ரெஞ்சுக்கு இருக்கும். இவர் விரைவில் 5000 எட்ட வாழ்த்துகிறேன். |
மதனின் படைப்புகளும் பின்னூட்டங்களும் மென்மேலும் மெருகு பெறவும் இன்னும் பல படைப்புகளையும் பின்னூட்டங்களையும் பதிக்க மனமார்ந்த பாராட்டுக்கள்
|
Quote:
|
All times are GMT +5.5. The time now is 11:42 AM. |
Powered by Kamalogam members