தமிழில் பதிக்காதவர்களின் அனுமதி நீக்கம்.
நண்பர்களே,
புதியவர்கள் சேர்க்கையை துவங்கும் போது வெகு நாட்களாக பதிவுகள் ஏதும் செய்யாமல் வந்து சென்று கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவ்வாறு வாய்ப்பு கொடுத்தும் மீண்டும் சும்மா வந்து படித்து விட்டு மட்டும் சென்று கொண்டிருந்தவர்ளுக்கான கெடு இந்த மாதம் நவம்பர் 15-ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதனால், இன்று அவ்வாறு தமிழில் பதிக்காமல், சும்மா வந்து சென்று கொண்டிருந்த ஏறத்தாழ 5000 உறுப்பினர்களின் அனுமதிகள் முடக்கப் பட்டது. இன்னும் சிலர் கடந்த 4-5 மாதங்களாக பதிக்காமல் உள்ளார்கள், அவர்களின் அனுமதியும் அடுத்த வாரம் முடக்கப் படும். (இது தவிர, புதிதாக சேர்ந்தவர்களில் இன்னும் தமிழில் பதிக்க துவங்காதவர்களின் அனுமதியும், விரைவில் முடக்கப் படும்.) அவர்கள் மன்றத்தில் உள்ளே நுழைந்து அட்மின் அறிவிப்பு, சப்போர்ட் செண்டர் என்ற இரண்டு பகுதிகளில் மட்டும் இனி வலம் வர முடியும், அப்படிப் பட்டவர்களை நம் மன்றத்தில் அடையாளம் காண அவர்கள் சாம்பல் நிறத்தில் (Gray Color) தோன்றுவார்கள். அவர்கள் இனியாவது திருந்தி தமிழில் பதிப்புகள் கொடுக்க நினைத்தால், என்னை k a m a l o g a m @ g m a i l . c o m முகவரியில் தொடர்பு கொண்டு, அடுத்த 30 நாட்களுக்குள் தமிழில் பதிவதாக உறுதியளித்தால், அவர்கள் கணக்கு மீண்டும் முடுக்கி விடப் படும். ஆனால், அவர்களுடைய பழைய அனுமதிகள், பதிப்புகள் மீண்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படமாட்டாது. நன்றி..!! பின்குறிப்பு: * இந்த அறிவிப்பு கட்டண உறுப்பினர்களுக்கு பொருந்தாது. * அந்தந்த மாதம் அனுமதியிழந்தவர்களுக்கு அதற்கு அடுத்த மாதத்தில் மட்டுமே அவர்கள் கணக்கு மீண்டும் முடுக்கி விடப் படும். . |
மயிலே மயிலே என்றால் எந்த மயில்தான் இறகு போடும்?
கண்டிப்பாக இதற்க்கு கைமேல் பலன் காத்திருக்கிறது. எதற்க்கும் தனிமடலில் அவர்களை எச்சரிக்கை செய்யலாம். அப்படியும் திருந்தவில்லையா? அவர்களின் கணக்குகள் நீக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.. |
இதை நான் வரவேற்கிரேன்..
|
மிகச்சரியான நடவடிக்கை இப்படி செய்வதால் நமது லோகத்தில் உள்ள எந்த பதிப்புகளும் பதிக்காதவர்களும் தமிழில் பதிக்க முயற்ச்சி செய்யாதவர்களும் இனியாவது திருந்துவார்கள் என்று நினைக்கின்றேன் , இது போல உள்ள அதிரடி நடவடிக்கையே அவர்களை திருத்து என்பதில் ஐயம் இல்லை, இது நல்ல ஒரு வரவேற்க்க தக்க நடவடிக்கையே
|
தமிழில் பதிவு செய்வது எங்களால் முடியுமா? என்று நினைத்தால்.. அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
முடியும் என்றால் முடியும்.. நான் அறிய எத்தணையோ நண்பர்கள் சந்தர்ப்பம் வரும் போது பயன்படுத்தி மிக விரைவாக தமிழில் டைப் செய்கிறார்கள். இந்த தளத்தில் இலவசமாக வலம் வர.. தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. அதையும் பயன்படுத்த முடியவில்லை என்றால்.. என்ன சொல்வது.. இரண்டே இரண்டு வழிகள் தானே உள்ளன! எனவே இத்தகையவர்களுக்கு நடவடிக்கை அவசியம். எனினும் தலைவர்.. இன்னொரு வாய்ப்புக் கொடுத்ததை நினைத்து நன்றி சொல்ல வேண்டும்! |
சிறந்த முடிவு தலைவர் அவர்களே... இன்று மட்டும் கிட்டத் தட்ட 5000 உறுப்பினர்கள் முடக்கப் பட்டது அதிர்ச்சியளிக்கின்றது... உறுப்பினர்களின் ஏனோ தானோ என்ற போக்கே இதற்கு காரணம்... இது ஏனைய உறுப்பினர்களுக்கு ஒரு பாடம்...
|
இந்த திரியை படிக்கும் போது சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு உள்ள ஞாபகம் வருகிறது... நானும் இந்த தளத்தில் சேர்ந்த போது எப்படி தமிழில் எழுத வேண்டும் என்று புரியாமலும், உள்ள கதையை படித்து எதுவும் பதிக்காமல் போய் வந்தேன்... 1 மாதம் கழிந்த பின் தளத்தில் நுழையும் போது எச்சரிக்கை மடல் வந்தது... அதன் பின்புதான் தமிழில் எழுதி விமர்சனம் பதித்து இன்று தங்க வாசல் வரை உலாவுகிறேன்... கதைகள் பதிக்காமலேயே 1 வருடம் முடிந்து சில நாள்களுக்குள் தங்க வாசல் தகுதி அடைந்துள்ளேன்...
சிரத்தை எடுத்து பதித்தால் சிறப்பாக அனுபவிக்கலாம்..... |
தமிழில் பதிக்காதவர்களை நீக்குவது தான் சரியான முடிவு. எனக்கு தெரிந்து என் நன்பர்கள் இருவரே இன்னமும் பதிப்பு எதையும் செய்யவில்லை. நமக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை முக்கியமில்லை, தமிழில் ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் தான் வேண்டும்.
|
5000 உறுப்பினர்களா ? ஆச்சிரியம் அளிக்கின்றது .
ஆம் உருப்பினர்கள் எண்ணிக்கை முக்கியம் இல்லை . தமிழில் ஆர்வம்தான் முக்கியம் . வாழ்க தமிழ் வளர்க தமிழ் . |
மிக வரவேறக்ககூடிய ஒரி விசயம் இது..
|
All times are GMT +5.5. The time now is 02:51 AM. |
Powered by Kamalogam members