2007 புதியவர்கள் சேர்க்கை : (முடிவுற்றது)
நண்பர்களே..!
இன்றுடன் நமது காமலோகத்தில் புதியவர்கள் சேர்க்கையை நிறுத்தி சரியாக 6 மாதம் ஆகிறது (28 டிசம்பர் 2006 − 27 ஜூன் 2007). மீண்டும் புதியவர்கள் சேர்க்கை வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால், இந்த முறை அவர்கள் நிச்சயமாக நமது விதிமுறையை படித்து புரிந்து கொண்டார்களா என்று அறிந்து கொண்ட பின்னரே நிர்வாகிகள் அவர்களது கணக்குகளை முடுக்கி விடுவார்கள். அதற்காக அவர்கள் புதிதாக பதிவு செய்து முடித்த பின், நமது விதிமுறைகளில் இருந்து கேட்கப் படும் 10 கேள்விகளுக்கு பதில் அனுப்ப வேண்டும். ஒரு கேள்விக்கு 10 மதிப்பெண். 60−க்கு குறைவாக மதிப்பெண் எடுப்பவர் கணக்கு முடுக்கி விடப் படாது. மேலும், அப்படி விண்ணப்பிப்பவர் இதற்கு முன்பு நமது விதிமுறைகளை மீறி அதனால் தடை செய்யப் பட்டவர் என்றால் அவர் மறுபடி சேருவது ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்திருந்ததாக தடை செய்யப் பட்டிருந்தால், அவர்கள் நிலைமையை விளக்கி நிர்வாகிக்கு மடல் அனுப்பினால், நிர்வாகியின் அனுமதி பெற்ற பின் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம், அல்லது முன்புள்ள கணக்கை மீண்டும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதை நமது காமலோகத்தில் சேர விரும்பும் உங்கள் நண்பர்கள், மற்றும் சேரமுடியாமல் திரும்பிச் சென்ற உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரிவித்து விடவும். உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!! பின்சேர்ப்பு: புதியவர் நுழைவு தேர்வுக்கான கேள்விகள் கொண்ட திரி இங்கே உள்ளது. புதியவர்கள் சேர்க்கை செப்டம்பர் 30-ம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போது புதிதாக யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை. வீணாக நுழைவுத் தேர்வு கேள்விக்கு பதிலனுப்பி எங்கள் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம் |
மீண்டும் புதியவர்கள் சேர்பதால் இன்னும் நிரைய படைப்புகள் கிடைக்கும் என்று நம்புவோம்.
இதே போண்ற தகவலை நான் 2 மாதம் தொடர்ந்து பார்த்து தான் இந்த லோகத்தில் சேர்ந்தேன். இந்த அறிவுப்பு எனக்கு அந்த பழைய ஞாபகம் வந்து விட்டது. இனி நன்பர்களுக்கு மெயில் மூலம் சொல்லி விட வேண்டியது தான். என்று இந்த லோகம் திறக்கும் என என் நன்பர்கள் சிலர் ஆவலுடன் காத்திருகிறார்கள் |
ஆம் தலைவரே, இந்த முடிவு உண்மையாக வரவேர்க்க வேண்டிய விடயமே, காரணம் நம் தலத்தில் அதிகமாக சுற்றிவந்த பல உறுப்பினர்கள் இப்போதெல்லாம் அதிகம் வலம் வருவதில்லை, அவர்களின் பங்களிப்பும் முன்பு போல் இல்லை.
ஒருவேளை வேலை பளுவாக கூட இருக்கலாம். இந்த நிலையில் புதியவர்கள் சேர்க்கை தளத்திற்க்கு புதிய தெம்பு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி |
சரியாக சொன்னீர்கள் வரிபுலி
சந்தடிசாக்கில் உள்ளே நுழைந்தவர்கள் சரியான பங்களிப்பை கொடுப்பதில்லை புதியவர்கள் வந்தால் சராசரியாக இல்லாமல் மிக புதுமையான படைப்புகளை எதிர்பார்க்கலாம்... நன்றி தலைவா... |
அப்படியே ஆகட்டும் தலைவரே....
|
மிக நல்ல முடிவு தலைவரே, அதற்கு முன் இருக்கும் உறுப்பினர்களில் பங்களிப்பு செய்யாதவர்களை களைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
|
நான் தேடு இயந்திரத்தில் காமலோகத்தை முதன்முதலாக கண்ட போது அது புதியவர்களுக்காக திறக்கபட்டிருந்தது. இப்பொழுது அதை நினைத்தால் அது என் அதிர்ஷ்டம் என்றே நினைக்க தோன்றுகிறது. நான் முதன் முதலாய் காமலோகத்தில் கதைகளை பதிக்க தொடங்கிய போது, என்னுடன் சேர்ந்த புதியவர்கள் மட்டுமல்ல, மற்ற உறுப்பினர்களும் தலைவாசலில் என் கதைக்கு பாராட்டு தெரிவித்து என் எழுத்திற்கு ஊக்கம் அளித்தார்கள். இப்பொழுது வரும் புதியவர்களில் நல்ல படைப்பாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சரியான ஊக்கமளிக்கவே விரும்புகிறேன்.
|
வரவேற்க்க பட வேண்டிய முடிவு. கேள்விக்கான பதிலை அவர்கள் சரியாக கொடுத்தால்( பாஸ்மார்க் எடுத்தால்) மட்டுமே சேரமுடியும் என்பது நல்லதொரு தீர்வு, இப்போது இருக்கும் உறுப்பிணர்களில் சிலர் இன்னும் தவறாக தங்களது பதிப்புகளை தவறான இடத்தில் பதிக்கிறார்கள், அதையெல்லாம் இனி எளிதாக சரிசெய்ய இத்தகைய பரீட்சைகள் உதவும் என்பது உன்மை, புதியதாக சிந்தித்து தளத்தை மேம்படுத்தும் தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்
|
மீண்டும் புதியவர்களை சேர்த்துக்கொள்ள நிர்வாகி எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. ஆவலுடன் காமலோகத்தில் இனைய காத்திருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி. அதேவேளை புதியவர்களும் காமலோக விதிமுறைகளை தவறின்றி கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்ப்போமாக.
|
புதிய நண்பர்களையும் அவர்கள் படைப்புகளையும் வரவேற்க்க தயாராவோம்.
என்னை போன்ற புதியவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் எதுவுமெ புரிவதில்லை. உதாரணமாக நிறைய திரிகள் இருப்பதால் குழம்பி விடுகின்றனர். இப்போது முதலிலேயெ படிக்க செய்வது ஒருவேளை பயனளிக்கலாம். |
All times are GMT +5.5. The time now is 08:46 AM. |
Powered by Kamalogam members