நடிகர் ரகுவரன் காலமானார்
நடிகர் ரகுவரன் சென்னையில் காலாமானார். உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் உள்ள மேத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த பல வருடங்களாக மது பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர், அப்பழக்கத்திலிருந்து மீண்டு, மறுபடியும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் அசோகா. நடிகை ரோஹிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன், அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியே வாழ்ந்து வந்தார். தீவிர சாய்பாபா பக்தர். அவ்வப்போது புட்டபர்த்தி சென்று சாய்பாபாவை தரிசிக்கும் வழக்கமும் அவருக்கு இருந்தது. சமீபகாலமாக மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ரகுவரன், இதன் காரணமாக உடல் நலத்தில் சீர்கேடு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. ரகுவரனுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். ரகுவரனின் ஆத்மா சாந்தியடைய காமலோகம் சார்பில் பிரார்த்திப்போம்....
நன்றி: தமிழ்சினிமா.காம் |
என்ன ஆச்சு நம்ம தமிழ்நாட்டுக்கு...? இப்படி ஒவ்வொருத்தரா அதிர்ச்சியா திடீர் திடீர்னு மரணம் அடைகின்றனர்...?
|
வெல்கம் பேக் xxxபெண்ணே !!
நல்ல நடிகரை திரை உலகம் இழந்து விட்டது என்று சொல்லலாம் ! ஆனால் மது பழக்கத்துக்கு அடிமையாகி இப்படி வாழ்க்கையை வீணாக்கி கொண்டாரே என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது ! |
நல்ல திறமையான நடிகர்...மதுப்பழக்கத்தினால் அல்ப ஆயுஸில் போய் விட்டார்...ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்...
|
தமிழ் திரையுலகில் எனக்கு பிடித்த திறமையான நடிகர் என்றால் அது ரகுவரன் மட்டும் தான்,
அவரது “ஐ நோ, ஐ நோ” வசனம் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது. அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவருக்கு என் அஞ்சலி. |
http://tbn0.google.com/images?q=tbn:...ghuvaran35.jpghttp://tamilgirls.dk/files/pictures/...picture-83.jpg
ரகுவரனின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள் ரகுவரன் மதுவால் இழந்தவைகள்..1) பட வாய்ப்புகள்.2) மனைவி (ரோகினி) 3) குழந்தை..4) சேர்த்த சொத்துக்கள் 5) இப்போது கடைசியாக உயிர் http://content.answers.com/main/cont...Raghuvaran.jpg |
திறமையான, யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
|
முன்னால் நடிக்கத்தெரிந்தவர்களை மட்டும் நடிகர்கள் என அழைத்தார்கள்.
ஆனால் இப்போதோ எல்லோரையும் நடிகர்கள் என அழைத்டுக்கொண்டிருக்கிறோம். ரகுவரன் மிகச்சிறந்த நடிகர். நாங்கள் தயா படம் பார்க்க சென்றிருந்தோம். இடைவேளையில்தான் ரகுவரன் வருவார். ஆனால் அவர் வரும்போது ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்தது இன்னும் என் நினைவில் உள்லது. ஏனோ காலன் அவரை திட்டமிட்டு மதுக்கு அடிமையாக்கி அழைத்து சென்றுவிட்டான். ரகுவரனின் ஆத்மா சாந்தியடையட்டும். |
[QUOTE=mouse1233;673616]ரகுவரனின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்
ரகுவரன் மதுவால் இழந்தவைகள்..1) பட வாய்ப்புகள்.2) மனைவி (ரோகினி) 3) குழந்தை..4) சேர்த்த சொத்துக்கள் 5) இப்போது கடைசியாக உயிர் எலியாரே சரியாக சொன்னீர்கள் மது அரக்கனால் மானம் மரியாதையையும் போய் விடுகிரது. ரகுவரன் நல்ல நடிகர் அவர் ஆத்மா சாந்தியடையட்டும். |
தமிழ் திரையுலகம் மீண்டும் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது...
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.. |
All times are GMT +5.5. The time now is 07:16 AM. |
Powered by Kamalogam members