ராஜாதி ராஜன் எங்கள் ராசராசன் - 7000 பதிவுகள் வாழ்த்து திரி (updated:25.07.2015)
'ராஜாதி ராஜன் எங்கள் ராசராசன்' அவர்களின் '3000 பதிப்புகளுக்கு’ வாழ்த்துக்கள். நமது தளத்தில் யார் வேண்டுமானாலும் பழகலாம் என்பதுபோல் எல்லோருக்கும் நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கும் http://www.kamalogam.com/new/customa...tar12910_1.gif'தங்கமான நண்பர்' ராசராசன் (அ) ராசப்பர் அவர்கள் '3000 பதிப்புகளை'தொட்டுவிட்டார். அவரை பற்றி சொல்வதென்றால்... லோகத்தில் சேரும் புதியவர்கள் பலருக்கு கை பிடித்து வழிகாட்டுபவர்கள் லிஸ்டில் இவரும் முதல் வரிசையில் இருப்பவர். நிர்வாக சவாலில் கலந்து கொள்ள செய்வது, கலந்து கொள்பவர்களை ஊக்குவிப்பது என தங்கவாசலுக்கு வழிகாட்டுபவர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவர். அந்த வகையிலும் இவரை 'தங்கமான நண்பர்' என்று அழைப்பது பொருந்தும். சமீபகாலமாக அவரது சொந்த அலுவல் காரணமாக அவரால் தொடர்ந்து தளம் வரமுடியாமல் இருந்தாலும், தற்போது அவரை நாம் அவ்வப்போது காண முடிவது அனைவருக்கும் மகிழ்ச்சியான விசயமாகவே இருக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து... தளம் வரும் பட்சத்தில் இவரால் இங்கு பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. தங்கவாசல் நண்பர்களுக்கு இவர் 'ஒரு வகையில்' ஸ்பெஷல் என்பதும் ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். இவரை வாழ்த்த வரும் சீனியர் உறுப்பினர்கள் மற்றும் இவரோடு பழகிய நண்பர்கள் இவரை பற்றி நிறைய சொல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவரது கதைகள் பல அனைவராலும் விரும்பப் பட்டவை. அதில் எங்களை மிகவும் கவர்ந்தது என்றால்... 'பாலைவனத்தில் ஒரு தனிவீடு' என்ற கதை தான். 'பிழைப்புக்காக வெளிநாடு சென்று வாழும் ஒரு தமிழனின் கதை' அது. என்ன ஒரு நடை! என்ன ஒரு கரு! என்ன ஒரு காமம்! என்றும் மறக்க முடியாத ஒரு அற்புத படைப்பு அது. அதோடு, இவரால் ஆரம்பிக்கப்பட்ட பயனுள்ள பல திரிகளும் நம் லோகத்தில் உண்டு. படைப்புகள் கொடுப்பதோடு மற்றவர் படைப்புகளுக்கு பின்னூட்டம் மற்றும் ஐகேஷ்கள் கொடுத்து உற்சாகப்படுத்துபவர். சீனியர் உறுப்பினர்கள் முதல் புதிதாய் தளம் நுழைபவர் வரை அனைவருக்கும் நேசக்கரம் நீட்டும் ராசராசன் (அ) ராசப்பரை அனைவரும் வாழ்த்துவோமே..! நண்பர் ராசராசனுக்கு எங்கள் வாழ்த்துக்களுடன் சில ஐகேஷ்கள் அன்பளிப்புகளையும் வழங்குகிறோம். இபணத்தை சரியாக பயன்படுத்துபவர்களில் இவரும் ஒருவர், அதனால் நண்பர்களும் இவருக்கு இபணம் கொடுத்து வாழ்த்துமாறு கேட்டு கொள்கிறோம். ராசராசன்: சுய விபரங்கள் <><><><><> படைப்பாளி அறிமுக திரி திரியை வழங்குபவர்கள்: சீனா & பச்சி திரியை அழகுபடுத்தியது: ரசி கேம்ரன் |
http://www.kamalogam.com/new/showthread.php?t=33709 நான் லோகத்துக்கு வந்த புதியதில் என் முதல் நன்பர் ராசராசன் தான் :) . பாலைவனத்தில் ஒரு தனி வீடு இவரை அடையாளம் காட்டியது . காமலோக விமசர்ககளில் மிக குறிப்பிடத்தக்க ஒருவர். நடுவில் எஸ் ஆனார். இப்போது மீண்டும் ராசராசன்..
வெல்கம் பேக் ராசராசன். ( 250 இ.பணத்துடன் ) |
ராசராசன்,, நல்ல பண்பாளர்,, எனக்கு நல்ல நண்பர்.. நண்பர்களை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே..
மேலும் பல சிகரங்களை தொட இந்த அன்பு நண்பனின் வாழ்த்துக்கள்... |
வாழ்த்துக்கள்
நண்பர் ராசராசனை ஒன்னு ரெண்டு கதையின் பின்னூட்டமிட்ட ந(ண்)பராக மட்டுமே அறிந்திருந்தாலும், சில நண்பர்கள் சிலாகித்து சொல்வதை கேட்டிருக்கிறேன். பலரின் நன்மதிப்பை பெற்ற மனிதர் நிச்சயம் நல்ல உள்ளம் படைத்த மனிதராக தான் இருக்க வேண்டும்.
சீனாவும் பச்சியும் போட்டி போட்டுக்கொண்டு வாழ்த்து திரி ஆரம்பிக்க ப்ளான் பண்ணியதிலிருந்தே, ராசராசன் அவர்களின் நட்பின் தன்மை மிளிர்கிறது. என்னுடைய கப்பலுக்கு போன மச்சான் கதையில் ஒன்றி ரசித்து நீங்க இட்ட பின்னூட்டம், மறக்க முடியாதது. நண்பர்களை அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.. என்று சளக் அண்ணன் சொன்னதை கேட்டு, இப்பிடிப்பட்ட நண்பருடன் இவ்வளவு நாள் பழகாம உட்டுட்டமே என்று ஏக்கமே வந்திருச்சு. ராசராசண்ணே வாங்க பழகலாம் ! :) நண்பர் ராசராசன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மென்மேலும் உயர்ந்து, சிறப்பான வாழ்க்கை வாழவும் வாழ்த்துக்கள். அன்பு + அளிப்பாக 200 ஐகேஷ்கள் ! வாழ்த்து திரி ஆரம்பித்து சரியான நேரத்தில் மரியாதை செய்த சீனாவுக்கு பாராட்டுக்கள். |
நான் தளம் சேர்ந்த புதிதில் எனக்கு மிகவும் ஆதரவாகவும், உதவியாகவும் இருந்த நண்பர் ராசராசனின் 3000 பதிப்புகளுக்கு வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
எனது புதியவர் அறிமுகம் திரியிலும், படைப்பாளிகள் அறிமுகம் திரியிலும் முதல் ஆளாக வரவேற்று வாழ்த்தியவர். தனிமடல் மூலம் விசாரிப்புகள் கொண்டு மனதி(தா)ல் அன்பை பொழிந்தவர் நண்பர் ராசராசன். புதியவனான எனக்கு எப்படி கதை சுட்டிகள் இணைப்பது, சிக்னேச்சர் வைப்பது, கோட் செய்வது போன்ற விஷயங்களை கற்றுத்தந்து வழிகாட்டியவர். நிர்வாக சவாலில் கலந்து கொண்ட எனக்கு ஊக்கமாய் இருந்து வெற்றிக்கும் வழிகாட்டியதையும் மறக்க முடியாது. சீனாவுடன் திரியை ஷேர் செய்து கொண்டாலும் தனியே இந்த பதிப்பின் மூலம் வாழ்த்துவதில் இரட்டை சந்தோசம். வாழ்த்துக்களுடன் சில ஐகேஷ்கள் அன்பளிப்புகள் ராசப்பரே!!! |
3000 பதிப்பை தொட்ட அன்பு நண்பர் ராசராசருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இவரை என்னுடைய நண்பர் என்று சொல்லி கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இப்போது லோகத்தில் அதிகம் தென்படாவிட்டாலும் நேரம் கிடைக்கும் போது எல்லா திரிகளிலும் பதிப்புகளிலும் பதிந்து உற்சாக படுத்தும் நண்பருக்கு ஒரு ஜேஏஏஏஏஏ. நன்றிகளோடு ஒரு சிறு பரிசு திரி தொடங்கிய நண்பருக்கு நன்றி |
ராசராசன் அண்ணன் 3000ம் பதிவுக்கு என் வாழ்த்துக்கள். லோகத்தில் என்னை முதல் முதலாக நண்பனாக ஏற்றுக்கொண்டவர். (லோகத்தின் பலரின் முதல் நண்பராக ராசராசனாக தான் இருப்பார் போலிருக்கு) என் கதைகளை படித்து எனக்கு அன்பளிப்பும் கொடுத்து உற்சாகமும் ஊட்டியவர். என் புரைபைலிலும் வந்து வாழ்த்து செய்தி கூறிய ஒரே ஜீவன் ராசராசன் தான், அவரு நான் வாழ்த்து கூறூவதில் பெருமை அடைகிறேன்.
உங்களுக்கு என் சார்பாக 100இபணம். |
ராசராசனின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
கதைகளை நன்றாக படித்து அவைகளுக்கு சுவாரசியமாக பின்னூட்டம் இடுவதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். பழுகுவதற்கு இனிய நண்பர். தங்க வாசலில் இவருடைய பின்னூட்டங்கள் நல்ல ரகளை ரகம். அவருடைய " பாலைவனத்தில் ஒரு தனி வீடு " போன்ற கதையை மீண்டும் லோகத்திற்கு தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். விரைவில் அடுத்த ஆயிரத்தை அடையுங்கள் ராசப்பரே. எல்லா வளமும் அமைய வாழ்த்துக்களும், சிறிய நினைவு பரிசும். உன்னதமான ஒரு நண்பருக்கு சரியான தருணத்தில் திரியை ஆரம்பித்து கௌரவப்படுத்திய நண்பர்கள் சீனா & பச்சிக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும். |
3000 பதிப்பை தாண்டிய ராசராசன் அவர்கட்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இன்னும் பல ஆயிரங்களை கடவுங்கள். அதற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள். |
3000 பதிப்புகள் என்பது காமலோகத்தில் சுறு சுறுப்பாக இயங்கும் ஒவ்வொரு உறுப்பிணர்களின் முதல் லட்சிய எல்லை. அந்த இடத்தில் தன் பெயரையும் பொறித்துக்கொண்ட ‘தங்கமான நண்பர்’ ராசராசனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் இணைந்த காலங்களில் இவரின் பின்னூட்டங்கள் எனது கதைகளில் அதிகம் பார்க்கமுடியும். கதையை நன்றாக உள்வாங்கி விரிவான பின்னூட்டம் இடுவது ராசராசனின் தனிச் சிறப்பு. நமக்கு பின்னூட்டம் போடும் நண்பர்களில் கதைக்கு நாமும் பின்னூட்டம் போடவேண்டும் என்று இவரது ’பாலைவனத்தில் ஒரு தனி வீடு’ படித்தேன். குத்துக்கதை படிக்க போன இடத்தில் உணர்வுகளின் குவியலாக வெகு யதார்த்தமான ஒரு கதை எனக்கு கிடைத்தது. படித்த மனம் கனத்துப்போனது என்று சொன்னால் அது மிகையாகாது. ஒரு நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கி சொந்த காரணங்களால் இப்போது அடிக்கடி வரமுடியாவிட்டாலும் வரும் நேரங்களில் தனது பங்களிப்புகளை சிறப்பாகவே செய்துகொண்டிருக்கும் ராசராசன் மேலும் பல ஆயிரங்களைத் தாண்டி வர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். திரியைத் தொடங்கிய பச்சி & சீனா கம்பெனிக்கு பாராட்டுக்கள். |
All times are GMT +5.5. The time now is 11:23 PM. |
Powered by Kamalogam members