பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவிற்கு அஞ்சலி
எஸ்.எஸ்.ஆர் என்று நம்மிடையே மிகவும் பிரபலமான பழம்பெரும் நடிகரும் லட்ச்சியவாதியுமான சேடப்பட்டி சூரியநாராயண தேவர் ராஜேந்திரன் இன்று காலை சுமார் 11 மணியளவில் சென்னையில் காலமானார் என்ற செய்தியை மிக வருத்தத்துடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.
86 வயதான இவர் 1947 ல் பயித்தியக்காரன் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் சிவாஜி எம்.ஜி.ஆர் உட்பட பல முன்னணி நடிகர்களுடனும் தனித்தும் நடித்து பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். புராண படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைசிவரை பின்பற்றிய இலட்ச்சிய நடிகர். 1962 ல் தேனீ சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்று அகில இந்தியாவிலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை பெற்றவர். இவரது மறைவிற்கு நம் இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்துவோம். |
உயர்ந்த எண்ணங்களை கொண்டோரின் மறைவு தான் நம்மை பாதிக்கும்...
இந்த லச்சிய நடிகரின் லட்சியங்கள் நல்ல நோக்கிலே இருந்தது... என்னுடைய இரங்கலையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்... _______________________________ ramraj:017: |
ஆழ்ந்த வருத்தங்கள். மிகவும் சிறப்பான நடிகர். அவருடைய வசன உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும். அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
|
பழம்பெரும் நடிகர்
அவருடைய வசன உச்சரிப்பு அவரின் தனிச்சிறப்பு. லட்சிய நடிகரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். |
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர் சேடபட்டி "சிங்கக் குட்டி" என்று அழைக்கப் படும் எஸ். எஸ். ராஜேந்திரன் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், திரையுலகத்துக்கும் ஒரு பெரிய இழப்பு !
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான சினிமா பாடல் "ஏரிக் கரையின் மேலே போறவளே பெண் மயிலே ! நில்லு கொஞ்சம் நானும் வாரேன், சேர்ந்து பேசி போவோம் பெண்ணே ! இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது ! அவரது ஆன்மா சாந்தியடைய நான் வேண்டிக் கொள்கிறேன் ! |
தமிழ்த் திரையுலகில் தமிழ் உச்சரிப்பு சுத்தமாக உச்சரிப்பதில் நிகரற்ற ஒரு அருமையான நடிகர் மற்றும் நல்லவரை இழந்து விட்டோம். அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்...
|
பழம்பெரும் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...
|
அருமையான தமிழ் உச்சரிப்பிற்கு பேர் போன நடிகர், லட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் அவர்களின் ஆண்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்....
|
அவரது மறைவுக்கு எனது இரங்கல்கள்
|
பழம்பெரும் லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்...
|
All times are GMT +5.5. The time now is 01:27 AM. |
Powered by Kamalogam members