மௌனி காலமானார் இன்று! (02-06-2021)
காமலோக நண்பர்களுக்கு!
என் அருமை தங்கை/நண்பி மௌனி இன்று ஃபரீதாபாத்தில் 11.00 மணிக்கு இறைவனடி புகுந்தார், அக்கா சில காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இப்போது கீமோ செய்யும்போது கரோனா நோயால் பாதிக்கப்பட்டார். அவர் வேண்டுகோளின்படி அவர் இறந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்கிறென். காமலோகத்தை உயிராக நினைத்த உள்ளம். இறக்கும்போதும் அவர்கள் ராசு, அஷோ, ஜேஜே என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.நண்பர் அஷோக்கு குறிப்பாக சொல்ல சொன்னார், அருமை அக்கா மௌனிக்கு கண்ணீர் அஞ்சலி, ஜய2019 |
மிகவும் வருத்தமாக இருக்கிறது, நேற்று கடைசியாக தனிமடல் தந்து உடல் நிலமை மோசம் என்று சொல்லியிருந்தார். நம்பிக்கையோடு இருங்கள் என்று பதில் தந்தேன். பொய்யாகி விட்டது.
நான் நேசித்த ஒருவர், என்னை அண்ணா என்று அழைத்தவர் இன்று இல்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை |
மெளனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.. காமலோகத்தில் தங்களின் பங்கு அளவிடமுடியாதது.. உங்களைப் போல் இன்னொரு எழுத்தாளர் கிடைப்பாரா என்றால் அது சந்தேகமே.. உடலளவில் மறைந்தாலும் உங்கள் எழுத்துக்கள் வாயிலாக என்றென்றும் எங்களுடன் வாழ்வீர்கள்.. இந்த காமலோகம் என்றும் உங்களை மறவாது - இப்படிக்கு உங்களின் ரசிகர்களில் ஒருவன்
விதைத்துக்கொண்டே இரு!! முளைத்தால் மரம்!! இல்லையேல் உரம்!! |
இந்த செய்தி கேட்டவுடன் திடுகிட வைத்தது என்னை...மிகவும் வருந்தத்தக்க செய்தி....மிகவும் அன்பான நபர் அவர் இந்த காம உலகத்தில் கோலோச்சிய முடி சூடா தலைவி ராணி...அவருடைய கதைகள் சொல்லும் அவரை பற்றி.....அவருடைய ஆன்மா சாந்தம் அடைய பிராத்திக்கிரேன்.....இனி அவருடைய கதைகள் பேசும் இந்த உலகுக்கு.......ஆழந்த இரங்கல்கள்..
ஒரு பெண்ணாக இந்த காம உலகத்தில் சரித்திரம் பல படைத்தாய் நீங்கள்..... உங்கள் உடல் அழியலாம் ஆனால் உங்கள் படைப்பு என்றும் அழியாது |
மிகவும் வருத்தமான செய்தியை கண்டு மனம் கலங்குகிறது!!
உழைப்புக்கு பெயர் போன மௌனி காமலோகத்தில் தற்போது இல்லை என்று நினைக்கும் போது மனம் ஏற்க மறுக்கிறது!! அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!! |
நேற்றும் அவர் எழுதிய ஒரு தொடர்கதையை படித்தேன். அவருக்கு அதை பற்றி இன்று பாராட்டு / வாழ்த்து ஒன்று எழுதுவோம் என நினைத்து இருந்தேன்.
இந்த செய்தியை கேட்டதும் மிக வருத்தமாக உள்ளது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி. |
நண்பர் மௌனி காமக்கதைகளின் முடிசூடாராணி. அவர் நெடுங்காலம் இந்த தளத்தில் இருந்தாலும் அவர் எழுதிய கதைகள் பல இணைய தளங்களில் பலராலும் படிக்கப் படுகிறது. அப்படிப் பட்ட நீங்கப் புகழைப் பெற்றவர் இந்த நிமிடம் நம்மோடு இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் இந்த தளத்தில் இணைவதற்கு அவரது கதைகளும் ஒரு காரணம். இந்தப் பாழாய் போன கொரானாவிற்கு அவரும் தப்பவில்லை. இந்த கொடூரக் கொரானாவிற்கு மனதாபிமானமே இல்லை.
இந்த காமலோகமும் தமிழில் காமக்கதைகளும் உள்ளவரை மௌனியின் புகழ் இருந்து கொண்டேயிருக்கும். போய் வாருங்கள் மௌனி! உங்கள் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்!!! |
வருத்ததிற்குரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி இது. லோகத்தில் மிகசிறந்த கதாசிரியகளில் முக்கியமானவர். நல்ல மனதுகாரர், மற்றவரின் படைப்புக்களை பண்புடன் விமர்சிப்பவர்மௌனி அவர்கள். இது போன்ற சமயங்களில் தான் இறைவனின் மீது கோபமும் அவனது இருப்பின் மீது சந்தேகமும் ஏற்படுகிறது.
|
மௌனி அவர்கள் பெண் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அவர் பல கதைகளை தொடர்ந்து வாசித்திருக்கிறேன். அவரின் தீவிர வாசகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொண்ட நிலையில் அவர் மரணச் செய்தி மிகவும் வருத்தம் தருகிறது. இரங்கல், வருத்தம் என்பதெல்லாம் சம்பிரதாயச் சொல்லாக இருக்கலாம், ஆனால் அவை அந்த நேரத்தில் சார்ந்தோருக்கு சமாதானம் தரும் வலிமை மிகு சொற்கள். கொரோனா கொடிது, நம் கண் முன் நடமாடிய பலரை பறித்துக் கொண்டிருக்கிறது. மௌனி மரணமும் அவ்விதமே. அவரது ஆன்மா சாந்தியடையட்டுமாக |
ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவருடைய கதைகள் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியவை. காமக்கதைகள் படிக்க விரும்புவோருக்கும் படைக்க விரும்புவோருக்கும் அவருடைய கதைகள் ஒரு கிரியா ஊக்கியாகும்.
அவர் இன்று நம்மிடம் இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்!!!! |
All times are GMT +5.5. The time now is 08:49 PM. |
Powered by Kamalogam members