தனி மடல்கள் அனுப்புவது!!??
வணக்கம்,
இப்போது வரும் நண்பர்கள், நம் தளத்தில் உள்ள பெண் நண்பிகளுக்கு தனி மடல் அனுப்பி தொந்தரவுகள் செய்வதாக அறிகிறோம். இதே போல் இந்த வேலைகள் தொடர்ந்தால் தங்களின் அனுமதிகள் பூட்டப்படும். கவணத்தில் கொள்க! இங்கே வரும் பெண் நண்பிகள் எல்லோரும் அந்த எண்ணம் மட்டுமே மனத்தில் கொண்டா இங்கே வருகிறார்கள்? அவர்களும் பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ள தான் இங்கே வருகிறார்கள் என்பதை ஏன் மறந்து விட்டீர்கள்? தங்கள் மனதில் ஏற்படும் பெண் சம்பந்தமான கேள்விகளுக்கு எத்தனையோ நம் பெண் நண்பிகள் கருத்துக்களும், பதில்களும் தருகிறார்களே அதை ஏன் மறந்து விட்டீர்கள்? இந்த லோகம் நம் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் ஒரு ஆசிரமமாக ஏன் தாங்கள் நிணைப்பதில்லை? ஐய்யா... இது போல் தொந்தரவு செய்யவே வரும் நண்பர்களுக்கு, இந்த தளம் ஒருக்காலும் ஒத்துவராது. தாங்கள் இந்த தளத்தை விட்டு செல்வதே மேல். இது போல் தங்கள் தனிமடல் அனுப்பிய நண்பி என்ன சொன்னார் தெறியுமா? நடவடிக்கை ஒன்றும் எடுக்கவேண்டாம், மீண்டும் மீண்டும் செய்யும்போது எடுத்துக்கொள்ளாம் என்று கூறுகிறார். அப்படி பட்ட நல்ல மனம் கொண்ட நம் நண்பிகளுக்க தாங்கள் தனிமடல் மூலம் தொந்தரவு செய்கிறீர்கள்?? கொஞ்சம் சிந்தித்துபாருங்கள். பிலீஸ் நிருத்திக்கொள்ளுங்கள். நன்றியுடன் ஆதி (தலைவர் இதற்கு கருத்துக்கூறும் படி கேட்டுக்கொள்கிறேன்) |
தலைவரே நண்பிகளுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்புவது முறையல்ல. அது தடுக்க வேண்டும். நண்பிகளும் எங்களைப்போல சுதந்திரப் பறவைகைள். நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
|
முன்பே இது பற்றி பல முறை குறிப்பிட்டுள்ளோம், நமது விதிமுறையிலும் இவை சேர்க்கப் பட்டுள்ளது.
மற்ற உருப்பினர்களுக்கு அவர்கள் விரும்பாதவாறு அடிக்கடி தனிமடல் அனுப்பி தொந்தரவு செய்தல் கூடாது. குறிப்பாக பெண் உருப்பினர்களுக்கு (அவர்கள் உண்மையிலேயே பெண் தானா என்பது வேறு விசயம்). ஏன் பெண்களுக்கு? பெண்களிடம் ஆண்களை விட நல்ல காம கற்பனை வளம் உள்ளது, ஆனால், அவர்கள் மனம் திறந்து எழுதாததற்கு காரணம் அவர்களுக்கு வரும் Privacy problems, தனிமடல்கள், ஈமெயில்கள், சாட்டிங் செய்ய அழைப்பு போன்ற தொந்தரவுகள். இதனால், நல்ல கதைகள் படைக்க நினைப்பவர்கள் கூட இது போன்ற காம தளங்களில் அதிக நாட்கள் நிலைக்காமல் ஓடி விடுவார்கள். இதற்காக தான், நம் தளத்தில் அவர்களுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வராமல் இருக்க முழு பாதுகாப்பு கொடுக்கிறோம். நம்மால் முடிந்த மட்டும் அவர்களுடைய Privacy-யை யாரும் கெடுக்காமல் பார்த்துக் கொள்கிறோம். இதன் மூலம் அவர்களிடம் இருந்து நல்ல படைப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஆண்களின் கதைகளையே படித்து பழகி போன நமக்கு பெண்களின் கதைகள் ஒரு புதிய கோணத்தை அறிமுகப் படுத்தும் என்ற நம்பிக்கையும் கூட. நண்பர்களே...! இங்கே அவர்கள் காமக் கதைகள் படிக்கவும், படைக்கவும் மட்டுமே வருகிறார்கள், உங்களிடம் நட்புறவு கொள்ள அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். அவ்வாறு நட்புறவு தேவைப் பட்டால், அவர்களே உங்களை தொடர்பு கொள்ளுவார்கள், அது வரை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். இணையத்தில் பல "டேட்டிங்" தளங்கள் உள்ளன, அங்கே போய் "கடலை போடுங்கள்". நீங்கள் அவர்களை தொந்தரவு செய்ததாக ஆதாரத்துடன் நிருபித்தால், நீங்கள் இங்கிருந்து தடை செய்யப் படுவீர்கள். புதியவர்களே..! இங்கே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கவனிக்கப் படுகிறது, உங்கள் தனிமடல் உட்பட, என்பதை மறந்து விடாதீர்கள். |
பழைய உருப்பினர்களுக்கு இது பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். எல்லோரும் நல்ல நட்புடன் பழகி வருவதால் இது போன்ற தொந்தரவுகளை நம் குடும்பத்தில் நமக்கு வேண்டிய ஒருவருக்கு அளிக்கப்படும் தொந்தரவாகவே கருதுவோம். புதிய உருப்பினர்கள் இங்கிருக்கும் உருப்பினர்களுக்கிடையே தோன்றும் ஒரு மறைமுகமான பந்தத்தினை உணராமல் செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
எனவே, புதிய உருப்பினர்களுக்கு தனிமடல் அனுப்பும் வசதியினை நிறுத்தினால் என்ன என்று தொன்றுகிறது. குறைந்தபட்சம் வெண்கல வாசல் தகுதியாவது பெற்றால் மட்டுமே அவர்கள் மற்றவர்களுக்கு தனிமடல் அனுப்ப முடியும் என்று மாற்றினால் என்ன என்பது என் கருத்து. |
புதியவர்கள், தமது ஆர்வக் கோளாற்றினால் தான் இப்படி தனி மடல்கள் அனுப்புகிரார்கள்.... முதலில் இவர்களின் செயலை நாம் மேலதிகாரிகளிடம் சொல்வோம்.... அவர்கள் எச்சரிப்பின் பின்னரும் இப்படி தனி மடல் அனுப்புபவர்களின் தொல்லை நிருத்தப்படவில்லை எனின், நமக்கு வரும் மடலினை ஒரு Copy எடுத்து இந்த திரியில் Post செய்வோம்.....
தொந்தரவு பன்னும் நபர்களை அடுத்தவருக்கு அடையாலம் காட்டுவோம்..... தலைவர் அவர்களே, உதவியாளர் அவர்களே நான் சொல்வது சரியா தவறா.....???? |
smartman கூறுவது போல், வெண்கல வாசல் போகும் வரை நிருத்திவைக்கலாம் என்ற கருத்து நண்றாக உள்ளது. புதியவர்களும் நம் தளவிதிமுறைகளை பற்றி அறிந்துகொள்வார்கள்.
rose1604u, கூறும்படி செய்தால், நாம் அவர்களை ரெம்ப அவமானப்படுத்துவது போல் ஆகிவிடும். நாம் எல்லாம் நண்பர்கள் தானே? (மீண்டும் மீண்டும் செய்தால் அவர்களை இங்கே வராமல் நிறுத்திவிடலாம் ) எங்கே பதில் தாறுங்கள். |
புதிதாக வருபவர்களுக்கு தனிமடல் வசதியை, அவர்கள் தளத்தின் போக்கினை பழகும்வரை நிறுத்திவைப்பது நல்ல யோசனை.
பெண் பெயரில் ஒளிந்துவரும் ஆண் உறுப்பினர்கள், அந்த போக்கினை கைவிட வேண்டும். இங்கே எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டதிட்டங்கள் என்றபின் எதற்கிந்த வேஷம்?!.. அவ்வாறு பெண் பெயரில் வரும் ஆண் உறுப்பினர்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே எதிரில் இருப்பவரை பேசு கண்ணா பேசு என்பதுபோல பதிக்கிறார்கள்.. நம்மிலும் சிலர் கொஞ்சம் போட்டுப் பார்க்கலாமேவென மடலெழுதுகிறார்கள்.. அதை அவர்கள் நிர்வாகத்திடம் மாட்டிவிட்டு.. அல்லது வைத்து நண்பர்களிடம் அரட்டையடித்து இன்பம் காண்கிறார்கள்.. கூடுமானவரை அனைவரும் உண்மையாக இருக்க பழகிக்கொண்டால் பிரச்சினையே இல்லை. |
காமலோகத்தில் உறுப்பினராக சேர்ந்த ஆரம்ப காலங்களில் தனிமடல் போதை எல்லோருக்கும் இருக்கும். இங்கு பங்களிக்க ,படைக்க, படிக்க ஆரம்பிக்க இந்த போதை தெளிந்து விடும்.
இங்கே பெரும்பாலும் பெண் பெயரில் ஆண்கள்தான் ஒளிந்திருக்கிறார்கள் மற்றும் சில பெண்கள் ,ஆண் பெயரிலும் இருக்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டால் யாருக்கும் தனிமடல் அனுப்ப விரும்பமாட்டீர்கள். |
பெண் உறுப்பினர்களுக்கு தனிமடல்
சில பழைய / புதிய உறுப்பினர்கள் பெண் உறுப்பினர்களுக்கு கெட்ட வார்த்தைகளால் PM அனுப்புகிறார்கள். இது போன்று அநாகரீகமாக உலா வரும் அநாகரீகமான நபர்களை நிர்வாகம் கண்டிப்பதுடன் எச்சரிக்கை புள்ளிகளையும் கூட்ட வேண்டும் என்பது என் மற்றும் பெண் நண்பிகளின் தாழ்மையான கருத்து. நாம் லோகத்தில் உறுப்பினராக இருப்பதனால் வேசிகள் என்று அர்த்தம் அல்ல என்பதனை அறிவற்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி, கல்பனா |
நல்ல முயர்ச்சி. அநாகரீகமாக நடந்து கொள்ளும் உறுப்பினர்களை களை எடுக்கவேண்டும்.
ஒரு ஆண் எண்ற முறையில் எனது வருத்தத்தை தெரிவிக்கின்றேன். தலைவர் உங்கள் வேண்டுகோளை நிச்சயம் பரீசீலீப்பார். |
All times are GMT +5.5. The time now is 06:44 AM. |
Powered by Kamalogam members